மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.

அநுராதபுரம், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் சனிக்கிழமையான இன்று (வெப்ரவரி 15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக, ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More