நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மலேசியாவிலும் மாஸ் காட்டிய நடிகர் விஜய்…
முழுநேர அரசியலில் களத்தில் இறங்கப்போகும் TVK கட்சித் தலைவர் விஜய், தனது திரையுலக வாழ்க்கையின் இறுதி திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை முடிந்தவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். நடிகர் தளபதி விஜயின் இறுதி திரைப்படமான “ஜனநாயகன்” வரும் ஜனவரி 14ம் திகதி உலகெங்கும் வெளியிடப்படவுள்ள நிலையில். பாதுகாப்பு நிமித்தம் காரணமாக மலேசியாவில் அந்த திரைப்படத்திற்க்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. “ONE LAST TIME” என்று அண்மைக்காலமாக தளபதியின் ரசிகர்கள் விஜயின் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடிதீர்த்துவரும் நிலையில், யாரும்…

