விரைவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்களில் ஒன்றான “WION” செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமரின் விஜயத்துக்கான திகதி உறுதிசெய்யப்படாத நிலையில் ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் இப்பயணம் இடம்பெறலாம் என எதிர்ப்பிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார பின்னணியில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

Read More

அவுஸ்திரேலியாவிற்கு புயல் எச்சரிக்கை விடடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆல்ஃபிரட் என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி, பலத்த மழையையும், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றையும் கொண்டு வரக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக பிரிஸ்பேன் முழுவதும் 20,000 சொத்துக்கள் பாதிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Read More

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 12 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 12 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் மேலும் 30 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல்-ஃபர்சான் என்ற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஆசிய வளர்ச்சி வங்கி கடன்கள் மற்றும் மானியங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது.

சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஆசிய வளர்ச்சி வங்கி கடன் மற்றும் மானியத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு முறையின் செயல்திறன், சமத்துவம் மற்றும் பதிலளிக்கும் தன்மையை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தொடர்புடைய அமைச்சரவை முடிவு கூறுகிறது. இதற்கான ஆரம்ப நிதியுதவி 37.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனையும்…

Read More

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்.

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். கொரிய E8 விசா ஒப்பந்தம் முன்னர் கையெழுத்தானதாக பரவிய வதந்திகளுடன் தொடர்புடைய இடைநிலை நிதி பரிவர்த்தனைகள் இனி நடைபெறாது என்றும் அவர் கூறினார். அதன்படி, நியாயமான செலவில், குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் E8 இன் முதல் குழுவை நாட்டிற்கு அனுப்ப…

Read More

இனி வெறும் நயன்தாராதான்…!

இவ்வளவு காலமும் தன்னை ரசிகர்களும், ஊடகங்களும் Lady Superstar என பட்டமளித்து பாராட்டி அழைத்து வந்தமைக்கு நன்றி தெரிவித்த நடிகை நயன்தாரா,. இனிவருகின்ற காலங்களில் தன்னை வெறுமனே நயன்தாரா என மாத்திரம் அழைக்குமாறு நேற்று (மார்ச் 4) உத்தியோகபூர்வ அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அண்மைக்காலமாக இவ்வாறு பல சினிமா பிரபலங்கள் தங்கள் பெயரின் முன்னாள் இருந்த பட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. “தல” அஜித் – அஜித் குமார் அல்லது AK என தன்னை அழைக்கும்…

Read More

அமெரிக்காவின் உதவி இடைநிறுத்தலும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியும்.

உக்ரைன் அதிபருடனான காரசாரமான கலந்துரையாடலை அடுத்து அமேரிக்கா உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை இடைநிறுத்தும் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள ரஸ்யா தனது நாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு உண்மை என்றால் இது உக்ரைன் அரசாங்கத்தை சமாதான முயற்சிகளை நோக்கி உண்மையாகவே திருப்பிவிடும் என கிரெம்ளின் பேச்சாளர் திமிட்ரிவ் பெஸ்கோ தெரிவித்துள்ளார். இருப்பினும் சிலவேளைக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொண்டால் உக்ரைனிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு…

Read More

ஆரம்பமாகும் தவக்காலம்.

Ash Wednesday – திருநீற்றுப் புதன் என்றால் சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து. திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள்.இந்த சடங்கின் மூலம் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரமபமாகின்றது. இந்த தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்­டவர்கள் சுத்த போசனமும், 18 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருப்பது நன்மை….

Read More

கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இன்று முதல் 25% வரி

மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (மார்ச் 04) அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக இருந்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகன் மற்றும் கனேடிய அதிகாரிகள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

Read More

Adani Green Energy Sets New Benchmark Surpassing 12,000 MW Renewable Energy Capacity, Cementing Market Leadership

03rd March 2025: Adani Green Energy Limited (AGEL), India’s largest renewable energy (RE) company has surpassed a record 12,000 megawatts (MW) of operational portfolio. AGEL is the first and only renewable energy company in India to reach this landmark. AGEL’s 12,258.1 MW portfolio consists of 8,347.5 MW solar, 1,651 MW wind and 2,259.6 MW wind-solar…

Read More