மூன்றாவது தடவையாக வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்க பெடரல் வங்கி

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.25%  ஆக குறைத்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் அபாயத்தை தவிர்க்கும் நடவடிக்கையில், இந்த முடிவை எடுத்துள்ள பெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது. இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இதன்மூலம், தனிநபர் கடன், கடன் அட்டைகளுக்கான கடன் மற்றும் கார் அடமானக் கடன்களுக்கான வட்டி குறையும்…

Read More

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம்

கனடாவை சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற நிறுவனம் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம் பிடித்துள்ளது. UAE பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் பறக்கலாம். சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளது. விசா நெறிமுறைகளை கட்டுப்படுத்தியதால் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவை சந்தித்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் முதல் 20 இடங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம்…

Read More

வெனிசுலா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது

அமெரிக்கா, வெனிசுலா கடற்கரைக்கு அப்பால் உள்ள அதன் தடைகளுக்கு உட்பட்ட ஒரு எண்ணெய் கப்பலை (Oil Tanker) பறிமுதல் செய்துள்ளது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா அரசாங்கம் இதனை “சர்வதேச கடற்கொள்ளை செயல்” எனக் கண்டித்ததுடன், இது “வெளிப்படையான திருட்டு” என்றும், இதை சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம் என்றும் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தது

Read More

மொரோக்கோ – ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து 22 பேர் உயிரிழப்பு

மொரோக்கோ நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான ஃபெஸில் புதன்கிழமை (11) இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.  இரண்டு கட்டிடங்களில் ஒரு கட்டிடம் வெறுமையாக இருந்ததாகவும், மற்றொரு கட்டிடத்தில் இஸ்லாமிய மரபில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் அகீகா (Aqiqah) சடங்கு நடத்தப் பெற்றதாக ஃபெஸ் நகரை சேர்ந்த சட்டதரணி தெரிவித்துள்ளார். கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் எட்டு குடும்பங்கள் வசித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டதரணி மேலும்…

Read More

பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இன்று (21) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

ட்ரம்பின் இலக்கை பிரிட்டன் ஆதரிப்பதாகக் கூறியுள்ளது

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இலக்கை பிரிட்டன் ஆதரிப்பதாகக் கூறியுள்ளது. அமெரிக்கா தயாரித்த அமைதி வரைவுக்கு உக்ரைன் ஒப்புக்கொள்ள வாஷிங்டன் அழுத்தம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்ட நிலையில், பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளது. எனினும், ரஷ்யா தனது படைகளை விலக்கிக் கொண்டு, இந்தச் சட்டவிரோதப் படையெடுப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.

Read More

கியூபாவில் தினசரி மின்வெட்டைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறது

வெனிசுலா மற்றும் மெக்சிகோவிலிருந்து எரிபொருள் விநியோகம் குறைந்ததால், கியூபாவில் தினசரி மின்வெட்டைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், கியூபாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதி மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் குறைந்துள்ளது. முக்கிய கூட்டாளிகள் விநியோகத்தைக் குறைத்ததால், மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, தலைநகர் ஹவானாவில் கூட ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டு ஏற்படுகிறது.

Read More

ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பினை வழங்கியது

ஷேக் ஹசீனா மீதான வழக்கில் இன்று டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பினை வழங்கியது. ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு என ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றம்சாட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது:- “எனக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத அரசால் நிறுவப்பட்ட ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரபட்சமானவை,…

Read More

இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு !!

கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதலில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் இன்னும் தீவிரம் அடைந்தது. பொருளாதார விவகாரங்களுக்கான துணை பிரதமர் முல்லா அப்துல் கனி பரதர் இது குறித்து பேசும்போது பாகிஸ்தானின் மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது ஆப்கானிஸ்தானில் சுகாதாரத்துறையில் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வர்த்தகம்…

Read More