அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு அருகில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு தரை மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூ மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read More

விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண்- பணியாளர்கள் செய்த செயல்

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.ஏ.950 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட தயாரானது. எனினும் அது புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றார். அவர் ஆவேசத்துடன், விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் திட்டியுள்ளார். போர்த்துகீசிய…

Read More

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர்

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான கேட்டர்ஹாம், உலகின் வயது முதிர்ந்த நபராக அறிவிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சரேயில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் என்ற பெண், 115 வருடங்கள் மற்றும் 252 நாட்களாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் வயதான நபராக இருந்துவந்த பிரித்தானிய பெண்ணான இனா கானபரோ லூகாஸ் (116 வயது) மரணமடைந்ததைத் தொடர்ந்து கேட்டர்ஹாம் தற்போது மிகவும் வயதான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Read More

பதவி விலகினார் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை அறிவித்த விவகாரம் தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ (70), தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக் சூ போட்டியிடுகிறார். இதனால் தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா…

Read More

இஸ்ரேலில் பரவும் காட்டுத்தீ – அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை. காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது. புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து…

Read More

பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் – இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக பிபிஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார். பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார். அவர் PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார். இதுபோன்ற சோதனையான காலங்களில்…

Read More

வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் படைகள் நுழைந்தன. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் குர்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பின்னர் படைகள் மேற்கொண்டு உள்நுழைவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். இதில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியாவும் சுமார் 15 ஆயிரம் வீரர்களை அங்கு…

Read More

கோடிகளில் ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப் புறப்பட்டது. அந்தக் காலத்தில் உலகின் மிகப்பிரமாண்டமான சொகுசு கப்பல் இதுவாகும். ஆனால், தனது முதல் பயணத்திலேயே அந்தக் கப்பல் அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே உலுக்கிய இந்த விபத்து ஹாலிவுட் படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். இந்நிலையில்,…

Read More

எல்லையை கடக்க முயன்ற 54 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 54 “பயங்கரவாதிகளை” சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் அருகே நடந்தது. அங்கு அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் எல்லைக்குள் நேற்று இரவு ஊடுருவினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 54 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள்…

Read More

ஈரானில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் – 14 பேர் உயிரிழப்பு!

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று (26) ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, 750 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தீப்பரவல் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள…

Read More