அமெரிக்காவின் உதவி இடைநிறுத்தலும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியும்.

உக்ரைன் அதிபருடனான காரசாரமான கலந்துரையாடலை அடுத்து அமேரிக்கா உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியை இடைநிறுத்தும் தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள ரஸ்யா தனது நாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு உண்மை என்றால் இது உக்ரைன் அரசாங்கத்தை சமாதான முயற்சிகளை நோக்கி உண்மையாகவே திருப்பிவிடும் என கிரெம்ளின் பேச்சாளர் திமிட்ரிவ் பெஸ்கோ தெரிவித்துள்ளார். இருப்பினும் சிலவேளைக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திக்கொண்டால் உக்ரைனிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதற்கு…

Read More

ஆரம்பமாகும் தவக்காலம்.

Ash Wednesday – திருநீற்றுப் புதன் என்றால் சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து. திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள்.இந்த சடங்கின் மூலம் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரமபமாகின்றது. இந்த தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்­டவர்கள் சுத்த போசனமும், 18 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருப்பது நன்மை….

Read More

அனந்த் அம்பானியின் கனவுத்திட்டத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் நீண்ட நாள் கனவுத் திட்டமான வந்தாரா(Vantara) விலங்குகள் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ஜாம்நகரில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அந்த அழகிய மையத்தை பிரதமர் மோடி இன்று(மார்ச் 4) திறந்து வைத்ததோடு ஒவ்வொரு விலங்குகளாக தனித்தனியே நேரம் செலவு செய்து உணவூட்டி மகிழ்ந்தார் பிரதமர் மோடி. அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகைதந்த பிரபலங்கள் இந்த வந்தாராவை பார்வையிட்டு வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

Read More

கனடா மற்றும் மெக்சிகோவிற்கு இன்று முதல் 25% வரி

மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25% வரி அதிகரிப்பு இன்று (மார்ச் 04) அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையைத் தவிர்க்க முடியுமா என்பது குறித்து பல வாரங்களாக இருந்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகன் மற்றும் கனேடிய அதிகாரிகள் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தாலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.

Read More

AK 64 படத்தின் இயக்குனர் இவரா ? வெளிவந்த மாஸ் அப்டேட்

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கப்போகும் அவருடைய 64வது படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், விஷ்ணு வர்தன், சிறுத்தை சிவா, பிரஷாந்த் நீல் போன்ற இயக்குநர்களின் பெயர்களும் இதில் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னணி நடிகரும், பிரபல இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் தான் AK 64 திரைப்படம் உருவாகப்போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்துடன் இட்லி கடை படம் வெளியாவதாக கூறப்பட்டு வந்த…

Read More

ஜெர்மனியில் இடம்பெற்ற விபத்தினால் மக்கள் அச்சம்.

இன்று (மார்ச் 03) மேற்கு ஜெர்மனியில் மன்ஹெய்ம் நகரில் பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு உட்பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும், போக்குவரத்துக்கு மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு மன்ஹெய்ம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு…

Read More

உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய டிரம்ப்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. உக்ரைனின் கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதன்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ள…

Read More

பயிர் சேதத்தை குறைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க புதிய குழு

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க தேவையான பரிந்துரைகளை பெற சிறப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு குறிப்பிட்டது அமைச்சர் கே. டி. லால்காந்தவின் பணிப்புரையின் பிரகாரம் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக விவசாய அமைச்சின் செயலாளர் டி. எஸ்.ரணசிங்க பொறுப்பேற்றுள்ளார். இந்தக் குழுவில் 15 பேர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கோலாகலமாக ஆரம்பமான ஜெர்மனியின் “தெரு திருவிழா”

ஜெர்மனியின் கலாச்சார பாரம்பரியங்களில் ஒன்றான தெரு திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது கொலோன் நகரில் வண்ணமயமான ஆடைஅணிந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பெண்கள் திருவிழா, கவுன்ட் டவுன் உடன் இவ்விழா ஆரம்பமானது இந்த தெரு திருவிழாவில் விதவிதமான ஆடை அணிந்திருந்த பெண்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

இலங்கையின் துறைமுக முதலீடுகளுக்கு தயாராகும் நெதர்லாந்து

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் சுற்றுலா, துறைமுகம், முதலீட்டு துறைகளின்…

Read More