Seylan Bank has launched its latest Seylan Cards Redeem & Win promotion, giving Seylan Cardholders another exciting reason to make the most of their accumulated reward points. Running from 1 July to 31 August 2026, the campaign offers Seylan Cards Rewards Programme members the opportunity to win two return air tickets to Malaysia, courtesy of…
அமெரிக்காவின் வரிகள் மற்றும் வலுவற்ற ரூபாயின் பெறுமதி இலங்கையின் ஏற்றுமதியை எவ்வாறு பாதித்துள்ளது
இலங்கை பொருளாதார முன்னேற்றத்திற்கான மென்மையான பாதையில் பயணிக்கும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய வரிகள் ஆகிய இரண்டு பெரும் சவால்கள் ஒன்றிணைந்து, நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் கால் பங்கிற்கும் அதிகமான பொருட்கள் அமெரிக்காவிற்குச் ஏற்றுமதி செய்வதால், இந்த முன்னேற்றங்கள் வருவாய் மட்டுமல்ல, முதலீடு, போட்டித்திறன் மற்றும் நீண்டகால வளர்ச்சி ஆகியவற்றிற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
முன்னணிப் பொருளியல் நிபுணர் பேராசிரியர் சிறிமல் அபயரத்னவின் கருத்துப்படி, இந்த அழுத்தங்களை வெளிப்புற அதிர்ச்சிகளாகக் கருதாமல், உள்ளார்ந்த கட்டமைப்பு இடைவெளிகளின் அறிகுறிகளாகப் பார்க்க வேண்டும். “டிரம்ப் செய்தது மட்டும் பிரச்சனை இல்லை,” என அவர் விளக்குகிறார். “இலங்கை பல தசாப்தங்களாக அதிக பாதுகாப்பு மற்றும் திறமையற்ற வர்த்தக முறையை நடத்தி வந்துள்ளது என்பதே உண்மை. இந்த வரி நடவடிக்கை நமது சொந்த பலவீனங்களுக்கு ஒரு கண்ணாடியை பிடித்துக் காட்டியுள்ளது.”
‘பரஸ்பர வர்த்தக நியாயம்’ என்ற நியாயப்படுத்தலின் கீழ் புதிதாக முன்மொழியப்பட்ட அமெரிக்க வரி விதிப்பு முறை, அமெரிக்காவுடன் அதிக இருதரப்பு வர்த்தக மிகையைக் கொண்டிருக்கும் நாடுகளைத் தண்டிக்கிறது. இலங்கையின் ஏற்றுமதி அளவு ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், இது மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும். ஏற்கனவே குறைந்து வரும் இலாப வரம்புகளுடன் போராடிக் கொண்டிருக்கும் ஆடை ஏற்றுமதியாளர்கள், ஜூலை 8 ஆம் திகதி முதல் தற்போதுள்ள மிகவும் விரும்பப்பட்ட நாடு (Most Favoured Nation) வரியுடன் கூடுதலாக 44% வரியை எதிர்கொள்ள நேரிடும். இது முக்கிய உலக சந்தைகளில் அவர்களின் நிலையை அச்சுறுத்தும். பேராசிரியர் அபயரத்ன எச்சரிப்பது என்னவென்றால், சந்தைப் பங்கை இழப்பது மட்டுமல்ல, முதலீடுகளை முழுவதுமாக இழப்பதுதான் பெரிய ஆபத்து. “வியட்நாம் அல்லது பங்களாதேஷில் உற்பத்தி செய்வது மலிவாகிவிட்டால், குறிப்பாக ஆடை ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் உயிர்வாழ்வதற்கான தர்க்கத்தைப் பின்பற்றும் – மேலும் தங்கள் செயல்பாடுகளை அங்கு மாற்றும்.”
நாணய ஏற்ற இறக்கங்கள் இந்த நிலையற்ற சமன்பாட்டிற்கு மற்றொரு சவாலை சேர்க்கின்றன. டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை சுமார் 300 க்குள் நிலைநிறுத்தியுள்ள மத்திய வங்கியின் சமீபத்திய நிர்வாகம் இருந்தாலும், கடந்த ஆறு மாதங்களில் ரூபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதியாளர்களின் வருவாய் குறைந்துள்ளது. “ஒரே நேரத்தில் நாணய மதிப்பு உயர்வு, ஏற்றுமதி இலாபத்தில் சுருக்கம் மற்றும் வெளிநாட்டு சுங்க வரிகள் அதிகரிப்பு ஆகியவற்றை சமாளிக்க முடியாது. இது போட்டித்திறனை மூச்சுத் திணற வைக்ககிறது” என பேராசிரியர் அபேரத்னே குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க டொலர் உலகளவில் பலமிழக்கத் தொடங்கினால் — அவர்களின் சொந்த வணிக சுருக்கமும் பணவீக்க அழுத்தமும் காரணமாக இது வாய்ப்புள்ளதே — அது நமக்கு ஒரு புதிய அளவிலான கணிக்க முடியாத தன்மையை சேர்க்கும்.” என தெரிவித்தார்.
இந்த சவால்களுக்கு பின்னால் மிகப்பெரிய ஒரு பிரச்சினை உள்ளது: இலங்கை தன் சந்தைகளை வேறுபடுத்தாதது, வணிகக் கொள்கையை நவீனமயப்படுத்தாதது மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைந்து கொள்ளாதது. “1977-ல் தாராளமயமாக்கலின் போதிருந்தே ஏற்றுமதி-ஆதரவு வளர்ச்சி பற்றி பேசி வருகிறோம்,” என கலாநிதி அபேரத்னே கூறுகிறார். “ஆனால் இன்னும் வருடாந்த ஏற்றுமதி 12-13 பில்லியன் அமெரிக்க டொலரில் தான் சிக்கியுள்ளோம். இது ஒரு வெற்றிக் கதை அல்ல – இது ஒரு கடுமையான கொள்கை தோல்வி.”
“இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதி நம்மாலேயே உருவாக்கப்பட்டது,” என்று அவர் வாதிடுகிறார். சிக்கலான துணை-சுங்க வரிகள், ஒழுங்கற்ற இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் உற்பத்தி உள்ளீடுகளுக்கான உள்நாட்டு வரிகள் ஆகியவை உற்பத்திச் செலவை அதிகரித்து முன்கணிக்க முடியாததாக ஆக்கியுள்ளன. “இறக்குமதி மீதான வரிகள் கூட ஏற்றுமதியை பாதிக்கின்றன – குறிப்பாக ஆடைத் துறை போன்ற துறைகளில், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் முக்கியமானவை. நீங்கள் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும்போது, அடிப்படையில் உங்கள் ஏற்றுமதியாளர்களுக்கும் வரி விதிப்பதாகவே அர்த்தம்,” என்று குறிப்பிடுகிறார்.
“இந்தியா போன்ற நாடுகள் 17-க்கும் மேற்பட்ட முழுமையான இலவச வணிக ஒப்பந்தங்களில் (FTA) கையெழுத்திட்டிருக்கும் நிலையில், இலங்கை ஒரு சில பகுதிமுறை வணிக ஒப்பந்தங்களுக்கு அப்பாலும் விரிவாக்க முயற்சிக்கும் போது தடுமாறியுள்ளது.” பொதுமக்களின் எதிர்ப்பு, அரசியல்மயமாக்கல் மற்றும் பலவீனமான நடைமுறைப்படுத்தல் ஆகியவை பிராந்திய விநியோக சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்கும் வாய்ப்புகளை இழக்கக் காரணமாகியுள்ளன. “உலக வணிக முறைகளிலிருந்து நாமே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டோம், மற்றவர்கள் முன்னேறிய நிலையில். நமது வணிகக் கட்டுப்பாடுகள் காலாவதியானவை மட்டுமல்ல – அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துபவை,” என்று சுட்டிக்காட்டினார்.
“ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாகவும், பணவீக்க இலக்குகளை சீர்குலைக்காமலும் இருக்கும் வகையில் சந்தை-ஆதார விளிம்பு வீதக் கொள்கை தேவை,” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ரூபாயின் மதிப்பை படிப்படியாக குறைப்பது, சரியான முறையில் செய்யப்பட்டால், ஏற்றுமதி வேகத்தை பராமரிக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் – குறிப்பாக வெளிப்புற சூழ்நிலைகள் எதிராக இருக்கும் போது.” என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.