DIMO நிறுவனத்தின் நீண்டகால மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அதிக நிபுணத்துவம் கொண்ட பிரிவுகளில் ஒன்றான DIMO Engine Care பிரிவானது, ஒரு முக்கிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இது பாரம்பரிய நிபுணத்துவம் சார்ந்த ஒரு பணிமனையிலிருந்து (workshop), நவீன மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பொறியியல் வசதியாக அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கலான எஞ்சின்களின் முழுமையான திருத்த வேலைகள் (engine overhauling) மற்றும் இயந்திர பணிகளை (machining) கையாளுவதில் நிறுவனத்தின் ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவமானது…
ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது.மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு முன்பாக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் இக்கூட்டம் நடப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.