தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
கத்தியால் தாக்கப்பட்டு வயோதிபர் படுகாயம்!
களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இயைடில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயாகலை பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் தனது மருமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வீதியின் குறுக்கே முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த வயோதிபரும் அவரது மருமகனும் உணவக உரிமையாளரான முச்சக்கரவண்டி சாரதியிடம் முச்சக்கரவண்டியை சற்று நகரத்தி வழிவிடுமாறு கூறியுள்ளனர்.