நானுஓயா – பதுளை  புகையிரத சேவை இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் – போக்குவரத்து பிரதி அமைச்சர்

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த புகையிரத பாதைகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்படுகின்றன. நானுஓயா –பதுளை  புகையிரத சேவை இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனர்த்தத்தால் சேதமடைந்த வீதிகள் மற்றும் புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது.தற்போது வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 அனர்தங்களால் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியான  புனரமைப்பு பணிகளுக்கு மத்தியில் பதுளை – அம்பேவல வரையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2 thoughts on “நானுஓயா – பதுளை  புகையிரத சேவை இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் – போக்குவரத்து பிரதி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *