For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
பிள்ளையான் நாட்டிற்காகப் போராடிய உண்மையான தேசபக்தர் – உதயகம்மன்பில
தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இன்று நான் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு என் வாழ்நாளில் நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. நான் பிள்ளையானை ஒரு அரசியல்வாதியாக சந்திக்கவில்லை. ஒரு சட்டத்தரணியாகவே சந்தித்தேன்.
நான் எனது அரசியல் வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்கிறேன். அதனால்தான் நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் செல்வதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, அதைப் பற்றி ஊடகங்களுக்குச் சொல்லவில்லை.
நான் பிள்ளையானைச் சந்தித்ததை ஊடகங்களுக்குச் சொல்ல வேண்டாம் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள நிர்வாக அதிகாரி என்னிடம் கேட்டுக்கொண்டார். அப்போதும் எனக்கு சட்டத்தரணிகளின் நெறிமுறைகள் தெரியும்” என்று அவர்களிடம் கூறினேன்.
ஆனால் அடுத்து நடந்ததுதான் வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத வகையில் காவல்துறை அரசியல்மயமாக்கப்பட்டதற்கு சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த அரசாங்கத்தின் தலைவர்கள், நாட்டின் சட்டத்தை அப்பட்டமாக மீறி, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தைக் கூறும் ஆவணம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதைச் செய்யவில்லை.
மேலும், ஒரு சட்டத்தரணி தன்னுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதிக்க வாய்ப்பு கோரினால், அவருக்கு அது வழங்கப்பட வேண்டும். அதுவும் நிராகரிக்கப்பட்டது.
மேலும், அவர்களது குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் பேச அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
எவ்வாறாயினும், பிள்ளையானின் சட்டத்தரணியாக அவரை நான் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருந்தேன். பிள்ளையான் என்னிடம் கண்ணீர் பெருக்கெடுத்து பேசினார்.
“நான் புலிகளிடமிருந்து பிரிந்து என் உயிரைப் பணயம் வைத்து புலிகளைத் தோற்கடித்தேன். அப்போது புலிகள் பக்கம் போராடிய சிலர் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். சிலர் வெற்றிகரமான தொழிலதிபர்கள்.
சிலர் அரசு சாரா நிறுவனத் தலைவர்கள். அவர்கள் சமூகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்கிறார்கள். பொய்யான வழக்கின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டேன். இறுதியாக, ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு கைவிடப்பட்டது.
இப்போது நான் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். நாட்டைக் காப்பாற்ற நான் உதவியிருந்தாலும், என்னை இப்படித்தான் நடத்துகிறார்கள்.” என அவர் அழுதுகொண்டே கூறினார்.
சமூக ஊடகங்களில் எழுதும் சிலருக்கு பிள்ளையான் யார் என்று தெரியாது. இந்த நாட்டில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவர் ஆற்றிய தீர்க்கமான பங்கிற்காக அவர் ஒரு தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும்.
கருணாவும், பிள்ளையானும் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறி இராணுவத்தில் சேர்ந்த பின்னர் தான் விடுதலைப் புலிகளின் முடிவு தொடங்கியது.
பிள்ளையான் என்பவர் 14 வயதில் விடுதலைப் புலிகளினால் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஒரு சிறுவர் போராளி. விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை சேர்த்ததற்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார்.
பிள்ளையானைப் போலவே, கிழக்குப் புலித் தலைவர் கருணா அம்மானும் நமது இராணுவத்திற்கு தலைவலியாக மாறிய திறமையான போராளிகள்.
கருணாவும் பிள்ளையானும் 2003ஆம் ஆண்டு ஆறாயிரம் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறினர்.
விடுதலைப் புலிகளைக் கைவிட்டு, பிரிவினைவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக தனது உயிரைப் பணயம் வைத்து, நமது இராணுவத்துடன் இணைந்து நாட்டிற்காகப் போராடிய உண்மையான தேசபக்தர்.” என்று கம்பன்பில கூறியுள்ளார்.