ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ்…
புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டு தற்போது ஐம்பது வருடங்கள் கடந்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் சினிமா தொழிற்றுறைக்குரிய தொழிநுட்பங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நிறுவன மீள்கட்டமைப்பு மற்றும் பணிப்பொறுப்புக்களைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படாத துறைகள் தொடர்பாக மூலோபாய திசைமுகப்படுத்தலை ஏற்படுத்தும் நோக்கிலும் மற்றும் சினிமா ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் சினிமாக் கலாச்சாரத்தை மேம்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இலங்கை தேசிய திரைப்பட பேரவையின் கட்டமைப்பு மற்றும் பணிப்பொறுப்புக்கள் தொடர்பான அடிப்படை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி, இலங்கை தேசிய திரைப்பட பேரவையை தாபிப்பதற்காக ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

