உலகளாவிய வாகனத் துறையானது, மின்சார வாகனங்களை (EV) நோக்கி வேகமாக நகர்ந்து வரும் வேளையில், விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் நம்பகமான aftersales (விற்பனைக்குப் பின்னரான) சேவைகளுக்கான தேவை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பின்னணியில், இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவை அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அண்மையில் ‘Mercedes-Benz Flying Doctor Service Clinic 2026’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது….
புத்தாண்டின் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முறை 333,183 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும். அவர்களில் 253,390 மாணவர்கள் பாடசாலை ஊடாகவும், 79,793 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தொற்றியதாகவும் குறிப்பிட்டார்.
இப்பரீட்சைகள் கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றிருந்தன