ශ්රී ලංකාවේ කොළඹ නගරයේ සුප්රසිද්ධ Altair ගොඩනැගිල්ලෙහි හි නව ප්රදර්ශනාගාරයක් විවෘත කරමින් Kia සන්නාමය එහි අඛණ්ඩ ව්යාප්තිය සහ පාරිභෝගික සම්බන්ධතාවයන් හි සැලකිය යුතු පියවරක් ඉදිරියට තබා ඇත. 2026 අප්රේල් 7 වන දින මාධ්ය වෙත එළිදක්වන ලද මෙම නව ප්රදර්ශනාගාරය Altair ගොඩනැගිල්ලෙහි Retail 3 කොටස තුළ වර්ග අඩි 2,700 ක පමණ අවකාශයක් පුරා ව්යාප්තව ඇත. උපරිම…
யேசு பிறப்பு பெருவிழாவை ஆன்மீக உணர்வுடன் மட்டும் கொண்டாட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு!
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை, அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்காக அக்கறை செலுத்தும் ஆழமான ஆன்மீக உணர்வுடன் கொண்டாட வேண்டும் என்று இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்கள் அனைவருக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு விசேட அறிக்கையை வெளியிட்டு இந்த வேண்டுகோளை விடுத்த அவர்,
“நிலச்சரிவுகளால் ஆயிரக்கணக்கான நமது சக குடிமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள், சிலர் அகதி முகாம்களில் உள்ளனர்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த உடையைத் தவிர வேறு எந்த உடைமைகளும் இன்றி தவிக்கிறார்கள். இப்படியான சூழலில் நாம் எப்படி ஆடம்பரமான வெளிப்படையான கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே, “இந்த நத்தார் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சி, ஆடம்பரம் அல்லது தேவையற்ற வீண் செலவுகளால் மேற்கொள்ளப்படும் கொண்டாட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு” இறை விசுவாசிகள் அனைவருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“யேசு பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுங்கள், ஆனால் அதை ஆழமான ஆன்மீகச் சிந்தனைகளுடனும், தேவையில் இருப்பவர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதன் மூலம் செய்யுங்கள்” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Been playing on JL777 recently, not bad at all! Got some lucky spins. Check it out jl777 and maybe you’ll hit the jackpot too!