வீதிகளில் குவியும் அனர்த்தத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்கள்

கண்டி மாவட்ட அனர்த்தம் காரணமாக பலகோடி ரூபா பெறுமதியான பழுதடைந்த உணவுப் பொருட்கள் கம்பளை, கெலிஓயா, கஹட்டபிட்டிய முதலான பகுதிகளில் உள்ள பிராதன வீதிகளில் குவிந்துள்ளன.

அவற்றை அகற்றுவது கூட பாரிய சிரமமாக உள்ளதாகத் தெரியவருகிறது.

பல்லாயிரக்கணக்கான தொன்கள் எடை கொண்ட இப்பொருட்களை எங்கு எடுத்துச் செல்வது?  எங்கே? கொட்டுவது என்பன கூட பாரிய சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரிசி, மாவு, பருப்பு, வெங்காயம், மருந்துப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள், ஆடை அணிகள், வீட்டுத்தளபாடங்கள்   என விதம் விதமான பொருட்கள் பழுதடைந்து வீதிகளில் அனாதரவாகக் காணப்படுகின்றன. இவற்றை பயன்படுத்த முடியாதுள்ளது.

2 thoughts on “வீதிகளில் குவியும் அனர்த்தத்தால் பழுதடைந்த உணவுப் பொருட்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *