இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, வட மத்திய, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடுமென திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி, மாத்தறை, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் கடும் காற்றும் வீசக்கூடுமென தெரிவித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொல்லப்படுகிண்றீர்கள்.