இலங்கை கடற்படைத் தளபதியைச் சந்தித்தார் பிரான்ஸ் கூட்டுப் படைத் தளபதி

இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி ரியர் அட்மிரல் ஹக்கஸ் லைன் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் புதன்கிழமை (மார்ச் 19) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவைச் சந்தித்துள்ளார்.

இருவருக்கிடையிலான சந்திப்பில் இந்தியப் பெருங்கடலில் இடம்பெறும் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள் அடங்கலாக இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இருவருக்கும் இடையே நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *