கூடிய விரைவில் குறைந்த விலையிலான மதுபானம் அறிமுகம்

இலங்கை மதுவரித் துறை, நாட்டில் சட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலையிலான புதிய மது வகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது.

பொது நிதி குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில், மதுபான விலைகள் அதிகரித்ததால் பலர் சட்டவிரோத மதுபானம் அருந்தத் தொடங்கியிருப்பதுடன், இதனால் அரசாங்க வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் துறை ஆணையாளர் நாயகம் உதய குமார தெரிவித்ததுடன் முறையான ஒழுங்குமுறைகள் மற்றும் கண்காணிப்பின் மூலம், சட்டவிரோத மதுபானங்களை தடை செய்து, மக்களை மீண்டும் சட்டப்பூர்வமான மதுபான பயன்பாட்டுக்கு திருப்பி, அரசுக்கு வருவாய் அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

தற்போது வருவாய் உயர்ந்துள்ளது, இதற்க்கு வரிவிதிப்பு அதிகரிப்பல்ல காரணம், சட்டவிரோத வியாபாரத்தை கண்காணித்து சட்டப்பூர்வ வியாபாரமாக மாற்றியதே காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், குறைந்த விலையிலான புதிய மதுபான வகை அறிமுகப்படுத்தப்பட்டால், அதன்மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலாக ரூ. 50 பில்லியன் வருவாய் கிடைக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து, நிதி அமைச்சருக்கான ஒரு பரிந்துரை சமர்ப்பிக்க உள்ளோம் எனவும் உதய குமார கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *