உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
சிங்கராஜ வனப்பகுதியில் காட்டுத்தீ.

நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஹட்டன் சிங்கராஜ வனப்பகுதிக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையின் ஹட்டன் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு குடிநீர் வழங்கும் சிங்கராஜ நீர்த்தேக்கத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற ஒரு தனிநபர் அல்லது குழுவால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.