இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறனை மேம்படுத்துவதறற்காக “திரியென் தியுனுவட்ட” நிதி அறிவுத்திறன் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் புத்தளம் நகரத்தில் நடைபெற்றது. HNB Finance நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையானன பயிற்சி நிகழ்ச்சிகள் மூலம், HNB Finance நிறுவனம் ஏராளமான…
சுமார் 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக திருமலை நவம் தெரிவு.

திருகோணமலைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் நேற்று (மார்ச் 15) திருகோணமலை தமிழ்ச் சங்கத்திற்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.
சுமார் பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருக்கோணமலைத் தமிழ்ச் சங்கம் கேணிப்பித்தன் (அருளானந்தம்) ஐயாவின் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தஇந்த சங்கத்தின் தலைவராக திருமலை நவம்(நவரட்ணம் – முன்னாள் அதிபர் மற்றும் எழுத்தாளர்), செயலாளராக சி. காண்டீபன் (பள்ளி ஆசிரியர்) பொருளாளராக மு.மு.மு. முகைஸ் (பள்ளி முதல்வர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
துணை தலைவராக கவிஞர் க. யோகானந்தம், துணை செயலாளராக கவிஞர் தி. பவித்திரன் , உறுப்பினர்களாக அதிபர் சுஜந்தினி யுவராஜா, ஆசிரியர் அ. ரவீந்திரன், எமுத்தாளர் கதிர், திருச்செல்வம், கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கம், கவிஞர் எஸ். சிவசங்கரன், ஊடகவியலாளர் அ. அச்சுதன், சமூக செயற்பாட்டாளர் T. கோபகன், ஆசிரியர் மர்ளியா சக்காப், நூலகர் ந. யோகேஸ்வரன், எமுத்தாளர் அருஷா ஜெயராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தருணத்தில் தமிழ்ச்சங்கத்தின் இளைஞர் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.


