நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற இந்திய பிரதமர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற பிரதமரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்பாக வரவேற்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு கால நட்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்கான பிணைப்பு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்த இலங்கைக்கு வந்துள்ள இந்தியப் பிரதமர், நாளை (6) நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.