இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த தெரிவித்தார்.
பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த மேலும் தெரிவிக்கையில்,
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை நாளை ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி நள்ளிரவு 12:00 வரை இணையவழி (online) ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படாது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரச பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் மாத்திரமே தோற்ற முடியும்.
பரீட்சைக்கு தோற்ற ஆயத்தமாக உள்ள மாணவர்கள் 11 வயதுக்கும் குறைந்தவர்களாக காணப்பட வேண்டும்.
மேதிக தகவல்களுக்கும் விண்ணப்ப வழிமுறைகளுக்கும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியை பிரவேசியுங்கள்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான வழிமுறைகளும் குறித்த இணையத்தள முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள் – 011-2784537, 011-2786616, 011-2784208 011-2786200, 011-2784201
மின்னஞ்சல் முகவரி – http://gr5schexam@gmail.com
அவசர எண் – 1911
தொலைநகல் எண் – 011-2784422