அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
துணை சுகாதார பட்டதாரிகளுக்கு பொது அறிவு பரீட்சை!

பொது அறிவு பரீட்சையில் கட்டாயமாக பங்கேற்குமாறு துணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது சிக்கலானது என்று சுகாதார பணியாளர்களின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவு ஒரு சட்டவிரோத செயல் என்று அதன் அமைப்பின் செயலாளர் வைத்தியர் நிலான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பரீட்சையில் கட்டாயம் பங்கேற்குமாறு இம்முறை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களால், இணை சுகாதார பட்டதாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.துணை சுகாதார பட்டதாரிகளுக்கு பொது அறிவு பரீட்சை?
இருப்பினும், இணை சுகாதார பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் போது இதுபோன்ற பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தில் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.