அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் பங்கேற்பு.

இந்திய கூடைப்பதாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணி பங்குபற்றுகிறது.
இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து கழகங்கள் பங்குபற்றும் தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் பங்குபற்றும் கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணியினர் நேற்றுமுன்தினம் சென்னை சென்றடைந்தனர்.
இந்த அணியில் நர்வின் கனேஷ், ப்ரென்ட் தேவகுமார், சிம்ரன் யோகநாதன், சாருக்க பெர்னாண்டோ, மெத்திக்க ஜயசிங்க, மிந்திக்க விஜேநாயக்க, சஞ்சீவ குலமின, நிமேஷ் பெர்னாண்டோ, பாரத ரணதுங்க, தசுன் மெண்டிஸ், சசிந்து கஜநாயக்க, ருக்ஷான் அத்தபத்து, ஷாரோ பெரேரா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் தனது முதலாவது போட்டியில் நேபாளத்தின் டைம்ஸ் கூடைப்பந்தாட்டக் கழகத்தை இன்றும்(ஏப்ரல் 02) மாலைதீவுகளின் ட்ரெக்ஸ் கூடைப்பந்தாட்டக் கழகத்தை நாளையும்(ஏப்ரல் 03) பூட்டானின் திம்ப்பு மெஜிக்ஸ் கழகத்தை ஞாயிற்றுக்கிழமையும்(ஏப்ரல் 06) தமிழ் நாடு கழகத்தை திங்கட்கிழமையும்(ஏப்ரல் 07) கொழும்பு கூடைப்பந்தாட்ட கழகம் எதிர்த்தாடவுள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட கழகங்களுககு இடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொழும்பு புல்ஸ் கழகத்தை வெற்றிகொண்டதன் மூலம் தெற்காசிய கூடைப்பந்தாட் சங்க கழக சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற கொழும்பு கூடைப்பந்தாட்டக்
கழகம் தகுதிபெற்றது.
கொழும்பு கூடைப்பந்தாட்ட அணிக்கு “கஜா ஸ்போர்ட்ஸ்” பிரதான அனுசரணை வழங்குவதுடன் உத்தியோகபூர்வ சீருடைக்கான அனுசரணையை “மை கோலா” வழங்க முன்வந்துள்ளமை சிறப்பான விடயமே.