மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (மார்ச் 14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர். குறித்த சம்பவத்தில் சிறிதரன் ராஜேஸ்வரி (வயது 68) சக்திவேல் ராஜகுமாரி (வயது 74) ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூதூர்…
பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானம் இன்று எட்டப்படும்.

பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று (வெப்ரவரி 18) எடுக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள் பேக்கரி பொருட்கள் செய்யும் மாவின் விலையை 10ரூபாயால் குறைத்ததன் பின் இந்த தீர்மானத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தனது சங்க உறுப்பினர்களுடன் விவாதிப்பதாக அதன் தலைவர் என். கே. ஜெயவர்தன கூறினார்.