ஈரானில் வசித்து வரும் இலங்கையர்களுக்காக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை இன்று வெளியிட்டுள்ளது. ஈரானிலிருந்து வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கு தேவையான விமான பயண ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு இந்திய அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து வெளியேற விரும்பும் எவரும் கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் அல்லது டெலிகிராம் சேனல் வாயிலாக தெஹரானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம். +98 901 014 4557 /
+98…
மோசமான வானிலையால் 4 மாவட்டங்களில் 716 பேர் பாதிப்பு

இலங்கையின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடும் வெப்ப நிலை காரணமாக 2 மாவட்டங்களில் 1282 குடும்பங்களைச் சேர்ந்த 3834 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்ட மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.