பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும். இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு…
250 ரூபாவை நெருங்கும் தேங்காயின் விலை – NO சம்பல் NO புட்டு NO ரொட்டி
நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது.
ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக 180 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மீண்டும் 220 ரூபா முதல் 240 ரூபாவிற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் சந்தையில் தேங்காய் மற்றும் மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் சிறிய கடைகள் முதல் பெரிய விடுதிகள்வரை சில உணவிற்கு தேங்காய் பூ, தேங்காய் பால் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.
மேலும் வீடுகளிலும் புட்டு,ரொட்டி, தோசை என்பன தேங்காய் சம்பல் இல்லாமல் வேற்று உப உணவுகளுடன் உண்ணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.