கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
அரச வெசாக் பண்டிகை இந்த ஆண்டு நுவரெலியாவில்!
இந்த ஆண்டு அரச வெசாக் பண்டிகை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதன்படி, தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச வெசாக் பண்டிகை குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பௌத்த ஞானம் ஏற்படும் வகையில், இந்த ஆண்டு அரச வெசாக் கொண்டாட்டம் அனைத்து இன மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அரச வெசாக் தினக் கொண்டாட்டத்தை மே 12 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தன்று நுவரெலியாவில் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.