இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
மாணவர்களுக்கு 2028-ல் அறிமுகமாகவுள்ள புதிய பரீட்சை.

மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதமான பரீட்சை ஒன்றை 2028ம் ஆண்டு நடத்த உள்ளதாக
நாடளுமன்றத்தின் இன்றைய(மார்ச் 10) அமர்வின் போது பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதத்திலான பரீட்சை ஒன்றை 2028ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன் இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பிலும் தெளிவூட்டினார்,
புலமைப்பரிசில் பரீட்சை மூலம் ஏற்படும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசாங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் எனவும் பாடசாலைகளுக்கு இடையில் ஏற்படும் தர வேறுபாடு காரணமாகவுமே புலமைப்பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், பாடசாலைகளுக்கிடையிலான தர முரண்பாடுகளை களைய முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.