அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
சுமார் 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக திருமலை நவம் தெரிவு.

திருகோணமலைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் நேற்று (மார்ச் 15) திருகோணமலை தமிழ்ச் சங்கத்திற்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.
சுமார் பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருக்கோணமலைத் தமிழ்ச் சங்கம் கேணிப்பித்தன் (அருளானந்தம்) ஐயாவின் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தஇந்த சங்கத்தின் தலைவராக திருமலை நவம்(நவரட்ணம் – முன்னாள் அதிபர் மற்றும் எழுத்தாளர்), செயலாளராக சி. காண்டீபன் (பள்ளி ஆசிரியர்) பொருளாளராக மு.மு.மு. முகைஸ் (பள்ளி முதல்வர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
துணை தலைவராக கவிஞர் க. யோகானந்தம், துணை செயலாளராக கவிஞர் தி. பவித்திரன் , உறுப்பினர்களாக அதிபர் சுஜந்தினி யுவராஜா, ஆசிரியர் அ. ரவீந்திரன், எமுத்தாளர் கதிர், திருச்செல்வம், கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கம், கவிஞர் எஸ். சிவசங்கரன், ஊடகவியலாளர் அ. அச்சுதன், சமூக செயற்பாட்டாளர் T. கோபகன், ஆசிரியர் மர்ளியா சக்காப், நூலகர் ந. யோகேஸ்வரன், எமுத்தாளர் அருஷா ஜெயராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தருணத்தில் தமிழ்ச்சங்கத்தின் இளைஞர் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.


