அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ரமழான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது