அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு !

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த தெரிவித்தார்.
பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே.எம்.சி அமித் ஜயசுந்த மேலும் தெரிவிக்கையில்,
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை நாளை ஏப்ரல் 04 முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி நள்ளிரவு 12:00 வரை இணையவழி (online) ஊடாக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படாது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு அரச பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் மாத்திரமே தோற்ற முடியும்.
பரீட்சைக்கு தோற்ற ஆயத்தமாக உள்ள மாணவர்கள் 11 வயதுக்கும் குறைந்தவர்களாக காணப்பட வேண்டும்.
மேதிக தகவல்களுக்கும் விண்ணப்ப வழிமுறைகளுக்கும் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியை பிரவேசியுங்கள்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான வழிமுறைகளும் குறித்த இணையத்தள முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள் – 011-2784537, 011-2786616, 011-2784208 011-2786200, 011-2784201
மின்னஞ்சல் முகவரி – http://gr5schexam@gmail.com
அவசர எண் – 1911
தொலைநகல் எண் – 011-2784422