அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
புத்தாண்டின் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முறை 333,183 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும். அவர்களில் 253,390 மாணவர்கள் பாடசாலை ஊடாகவும், 79,793 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தொற்றியதாகவும் குறிப்பிட்டார்.
இப்பரீட்சைகள் கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றிருந்தன