அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
நீண்ட விடுமுறை – அதீத மின் உற்பத்தி – இலங்கை மின்சார சபை கோரிக்கை!

கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில் மாலை 3:00 மணி வரை தாமாகவே முன்வந்து அணைக்குமாறு இலங்கை மின்சார சபை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார பாவனையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மறுபுறம் இது சூரியன் சுச்சம் குடுக்கும் காலம் என்பதால் அதிக சூரிய மின் உற்பத்தி நடைபெறுவதால், தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது இஇதன் காரணமாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.