காலமானார் போப் பிரான்சிஸ்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், இன்று காலமானார்.

88 வயதான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக, கடந்த பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று மார்ச் இறுதியில் வாடிகனுக்குத் திரும்பினார்.

ஈஸ்டர் தினமான நேற்று வாடிகனில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, “காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு போப் பிரான்சிஸ் இறந்துவிட்டதாக வாடிகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *