இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவாக சர்வதேச சந்தையில் இலங்கை ரூபா வீழ்ச்சி

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தையின் (Bloomberg market) தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் உயர்வை எட்டும் 30 நாட்டு நாணயங்களில் 26 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி தேவைகள் அதிகரித்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவினால் வர்த்தகச் சுழற்சி விரிவாகி, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டில் அதிகரித்த இறக்குமதி தேவை காரணமாக வணிகப் பற்றாக்குறை விரிவடையும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.