ஹல்துமுல்ல, கபரகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் இடம்பெயர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வசித்து வரும் 50 குடும்பங்களுக்காக பதுளை லுனுகல பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பிட்ட வீட்டுத் திட்ட கட்டுமானப் பணியில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பல அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் பதவிகளுக்கு அப்பால், தாம் கட்டடத் தொழிலாளிகளாக பணியாற்றுவதாக அமைச்சர் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர்; 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மலையக…
நாடளாவிய ரீதியில் நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தல்

காலை 11 மணி வரை நிலைவரப்படி,
வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும்
திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
அநுராதபுர மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்
திகாமடுல்ல மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்
கொழும்பு மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தறை மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்
கம்பஹா மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்
பதுளை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
நுவரெலியா மாவட்டத்தில் 24 சத வீத வாக்குப் பதிவுகளும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தளை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.