மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்

மாகாணசபைத் தேர்தலை நடத்த  தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கிக் கொடுங்கள் என்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டாரே தவிர எதிர்க்கட்சிகளிடம் கோரவில்லை. மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (19)  நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்   பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும்  தொழில்   அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்புக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு உரிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தல் விரைவாக நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரும் அதற்கு  ஒத்துழைப்பு வழங்கினார். ஆனால் மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாடு கிடையாது.

நல்லாட்சி அரசாங்கம் மாகாணசபையில் மாற்றம் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு  பழைய தேர்தல் முறைமையை இரத்துச் செய்து, புதிய தேர்தல் முறைமையை  கொண்டு வந்து கலப்புத் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தியது.

One thought on “மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்

  1. Kho game khổng lồ hấp dẫn thành viên tham gia tại 188V chính thức không thể không kể đến dòng nổ hũ với phần thưởng lên tới hàng tỷ đồng. Tại đây có hàng trăm sản phẩm khác nhau với giao diện, cách chơi khác nhau, đưa tới trải nghiệm thú vị, không bao giờ nhàm chán cho thành viên tham gia. TONY01-29O

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *