7 News Pulse

2024 ஸ்கேன் ஜம்போ போனான்ஸா 55 விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் மற்றும் டெப் கணனிகளை பரிசளித்தது.

C.W. Mackie PLC நிறுவனத்தின் மிக விரைவாக நுகரப்படும் பாவனையாளர் பொருட்கள் (FMCG) பிரிவான ஸ்கேன் தயாரிப்புகள் பிரிவின் கீழ் உள்ள ஒரு முதன்மையான வர்த்தகநாமமான ஸ்கேன் ஜம்போ பீனட், “ஸ்கேன் ஜம்போ போனான்ஸா” மற்றும் “ஸ்கேன் டெப் ஜம்போ போனான்ஸா” ஆகிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரத்தின் 8ஆவது பதிப்பை நிறைவு செய்தது. இந்த நிகழ்வின் போது, ​​50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு மவுன்டைன் சைக்கிள்கள் வழங்கப்பட்டதோடு, 5 வெற்றியாளர்களுக்கு டெப் கணனிகள் வழங்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான நிகழ்வு…

Read More

கனடா டொராண்டோவில் நடந்த விமான விபத்து.

கனடா டொராண்டோவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி வீழ்ந்த விமானத்தில் இருந்த 80 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மின்னியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கிச் சென்ற போது தீப்பொறிகள் பறக்க ஆரம்பித்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்ப்பு பணிகள் ஆரம்பமாகின. இருப்பினும் பதினெட்டு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் என்னவென்று புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Read More

புத்தளம் பகுதியில் இசைக்கலைஞர் சடலம் மீட்பு.

புத்தளம், ஆராச்சிகட்டுவ பகுதியில் சிலாபம், மணக்குளம் பகுதியை சேர்ந்த பாடகரும் இசைக்கலைஞருமான 42 வயதான இந்திக ரொஷான் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விஜயகுபாத பகுதியில் உள்ள ஒரு வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று(வெப்ரவரி 17) இரவு கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன் , மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார்…

Read More

போதைப்பொருள் பாவனை உறுதியானால் பணி நீக்கம்.

பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சேவையை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  சேவையை விட்டு வெளியேறிய அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய பொலிஸ் வைத்தியசாலையில் பொருத்தமான பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும்…

Read More

காற்றின் தரக்குறியீட்டில் மாற்றம்.

கடந்த சில நாட்களாக நிலவிய காற்றின் தரக்குறியீட்டில் ஏற்பட்ட எச்சரிக்கை மாற்றம் தற்பொழுது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இருப்பினும் இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களில் சற்று மோசமாக காற்றின் தரம் நிலவுவதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உணர்திறன் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Read More

நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 66 வயதுடையவர் கைது.

நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரை பொலிசார் ஓமந்த் பொலீஸ் பிரிவின் சேமமடு பகுதியில் நேற்று (வெப்ரவரி 17) கைது செய்தனர்.. ஓமந்தை பொலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட்ட சோதனையின் போது ஓமந்தையில் வசிக்கும் குறித்த 66 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

10 ரூபாவால் பாணின் விலை குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடுஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையில் விடுவிக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ “KRISH” பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகைகள் இன்று (வெப்ரவரி 18) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை உயர் நீதிமன்ற நீதிபதியால் பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவிற்க்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Read More