7 News Pulse

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பற்றவையிடச்சென்ற பிரதமர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை இன்று (வெப்ரவரி 15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனையடுத்து பல்வேறு முக்கிய…

Read More

அமெரிக்காவில் மேலும் பல அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஆலோசகர்ரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கும் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்தாயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். உள்துறை, எரிசக்தி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகளில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக…

Read More

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த 13 நாட்களில் மட்டும் இலங்கைக்கு 115,043 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஜனவரி 1 ஆம் திகதி முதல் 367,804 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் இதுவரையிலான காலப்பகுதியில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள், உணவாக பணியாளர்கள், வாகன சாரதிகள்,…

Read More

இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சுகாதாரப்பரிசோதகருக்கு சிறை.

ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க இலஞ்சம் பெற்றபோது இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொது சுகாதார ஆய்வாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கலேவெல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றிய சம்பந்தப்பட்ட பொது சுகாதார ஆய்வாளர், நேற்று (வெப்ரவரி 14) ரூ. 200,000 இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.

கிரிபாவ பொலிஸ் பிரிவின் தம்சோபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபாவா பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்சோபுர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது, சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து குறித்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

90ஸ் கிட்ஸ்சின் கிரிக்கட் ஆதர்ச நாயகர்கள் கலந்து கலக்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) வெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமாகின்றது.

விளையாட்டுகளில் கணவான்கள் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் என்றும் குறைவதில்லை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ் ஆதர்ச நாயகர்கள் என்று அழைக்கப்படும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வேபெற்ற வீரர்கள் மீண்டும் களத்தில் கலக்குவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். இதனை அறிந்தே சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டி தொடர் நடத்தப்படவுள்ளது. டி20 பாணியில் நடத்தப்படும் இந்த தொடரில் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2025ம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் வெப்ரவரி 22ம்…

Read More

காதல், கவிதை என பெயர் சூட்டிய கமல்.

பாடலாசிரியர் சினேகன் – கன்னிகா தம்பதியினருக்கு கடந்த மாதம் 25-ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தங்களுடைய சமூகவலைத்தளத்தினூடாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். எப்பொழுதும் கமலை நலன்விரும்பியாக கருதும் சினேகன் தங்கள் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் வாங்க கமலை நேற்று(வெப்ரவரி 14) குடும்பமாகச்சென்று சந்தித்திருந்தார். அப்பொழுது கமல் இவர்களின் இரு குழந்தைகளுக்கும் ‘காதல்’, ‘கவிதை’ எனக்பெயர் சூட்டி தங்க வளையல்களையும் பரிசளித்துள்ளார். இது குறித்து அவர்கள் இவ்வாறு தங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ”காதலர் தினத்தில் … எங்கள் தங்க…

Read More

நயன் – விக்கியின் “தீமா தீமா” பாடல் ரீல்ஸ் .

இந்திய திரையுலகில் காதல் டு கல்யாணம் பண்ணின ஜோடிகளில் விக்கி – நயன் ஜோடிக்கு ரசிகர்கள் அதிகம். அதேமாதிரி அந்த ஜோடியும் சந்தோசமோ, துக்கமோ, காதலோ ரசிகர்களோடு எப்பவும் பகிர்ந்துக்குவாங்க. அந்த மாதிரி அவங்க காதலர்தின வாழ்த்துக்களையும், தங்களோட காதலையும் ஒரேயொரு ரீல்ஸ் செய்து வெளிக்காட்டி இருக்காங்க. விக்னேஷ் சிவன், அவர் இயக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ‘தீமா தீமா’ என்ற பாடலை தன்னோட நயன் மற்றும் உயிர்,உலக மனத்துல வச்சு எழுதினது சொல்லியிருந்தார். அந்தப்பாடல்…

Read More

இசையமைப்பாளர் தமனுக்கு கிடைத்த “போர்ஷே”.

பிரபல தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘Akhanda, Veera Simha Reddy, Bhagavanth Kesari, Daaku Maharaaj’ போன்ற திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக பின்னணி இசையை அட்டகாசமாக தந்தவர் இசையமைப்பாளர் தமன்.குறிப்பாக ‘Akhanda’ படத்தின் BGM பாலய்யா ரசிகர்களின் ரிங் டோனாகவே மாறும் அளவிற்கு வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ‘Akhanda 2: Thandavam’ தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இந்த திரைப்படத்துக்கு தமன்னே இசையமைக்கின்றார். இந்நிலையில் திடீரென பாலய்யா, இசையமைப்பாளர் தமனுக்கு ‘போர்ஷே’ சொகுசுக் காரைப் பரிசாக வழங்கியிருக்கிறார். இதுகுறித்து பாலய்யா,…

Read More