Doneproduction

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பான முறைப்பாடுகளை ஆராய புதிய குழு நியமனம்!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள், ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட விடயங்கள் தொர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.  குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கல்லூரியின் ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.  பெயரை வெளிப்படுத்த விரும்பாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால்…

Read More

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் ஸ்திரத்தன்மை காரணமாக அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார்.

Read More

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து மத்தியவங்கியின் அறிக்கை

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83(c) ஐ மீறி, Pro Care (Pvt) Ltd. மற்றும் Shade of Procare (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.  மேலும், பின்வரும் கம்பனிகளும்/செயலிகளும், திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம்…

Read More

தீ அனைப்பு உபகரணங்கள் மேம்படுத்துவதற்காக ஜப்பானின் உதவியின் கீழ் விசேட திட்டம்

இலங்கை முதலீட்டு சபை (BOI)யின் கீழ் செயல்படும் ஏற்றுமதி வலயங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 14 ஏற்றுமதி வலயங்களிள் உள்ள 285 நிறுவனங்களில் சுமார் 145,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த வலயங்களில் தீயணைப்பு திறனை மேம்படுத்துவது ஊழியர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 4,000 லிட்டர் தண்ணீர் தொட்டி கொள்ளளவு…

Read More

மாத்தறை துப்பாக்கிச் சூடு – நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபர்கள்

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று மாத்தறை வெலிகம ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஆறு சந்தேக நபர்களும் இன்று (21) சீராக்கல் மனு ஊடாக மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Read More

விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் விபத்து

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.  கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.  விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 

Read More

வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

களுத்துறையில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெலுவ – பெலவத்த வீதியில் லொறியுடன் முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது களுபோவிட்டிய பகுதியை சேர்ந்த 55 மற்றும் 27 வயதான பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பாடசாலை காலணிகளுக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.   அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.   அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.04.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.   முன்னதாக, அவற்றின் செல்லுபடியாகும் காலம் இன்றுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Read More

ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் சிலர் கைது

கண்டியில் உள்ள பாதஹேவாஹெட்ட தொகுதியில் ஐக்கிய மக்கற் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்கத் தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அம்பிட்டிய பகுதியில் இந்நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த 8 வாகனங்களையும் கண்டி தலைமையக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தற்போது அவை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Read More

தேபந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ்மா தேசபந்து தென்னகோன், நேற்று காலை தனது சட்டத்தரணிகளுடன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (19) சரணடைந்திருந்தார்.  அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (20) வரை விளக்கமறியலில்…

Read More