கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
தீ அனைப்பு உபகரணங்கள் மேம்படுத்துவதற்காக ஜப்பானின் உதவியின் கீழ் விசேட திட்டம்
இலங்கை முதலீட்டு சபை (BOI)யின் கீழ் செயல்படும் ஏற்றுமதி வலயங்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 14 ஏற்றுமதி வலயங்களிள் உள்ள 285 நிறுவனங்களில் சுமார் 145,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த வலயங்களில் தீயணைப்பு திறனை மேம்படுத்துவது ஊழியர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
எனவே, ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 4,000 லிட்டர் தண்ணீர் தொட்டி கொள்ளளவு கொண்ட நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கட்டுநாயக்க, பியகம, சீதாவக மற்றும் வத்துபிடிவலை தொழில்துறை வலயங்களுக்கு 12 செட் உபகரணங்களை வாங்க 300 மில்லியன் ஜப்பானிய யென் (தோராயமாக LKR 590 மில்லியன்) மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவிகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கணிசமாக அதிகரிக்கும், மேலும் இந்த அலகுகளின் உடனடி அவசரகால பதில்கள் காரணமாக தொழிலாளர்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கவும், இழப்புகளைக் குறைக்கவும் உதவும்.
இந்த முக்கியமான மானியத்தை முறைப்படுத்துவதற்காக நேற்று (20) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வ கையொப்பமிடும் விழா நடைபெற்றது.
இந்த பரிமாற்றக் குறிப்புகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு. கே.எம். மஹிந்த சிறிவர்தனவும், ஜப்பான் அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமட்டாவும் கையெழுத்திட்டனர்.
இந்த மானியத்திற்காக இலங்கை அரசாங்கம் ஜப்பானுக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதோடு, இலங்கைக்கு மிகவும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.