gurueaswar

பாதுகாப்பு மையங்களில் தங்கி இருக்கும் குடும்பங்களை நேரில் சந்தித்த அமைச்சர் சந்திரசேகர்

அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவலைகளையும் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடந்த உரையாடல்களின்போது, அனர்த்தத்தின்…

Read More
thiruboshaaaaa

ரூ.100 மில்லியனை பங்கிலாபமாக செலுத்திய திரிபோஷா

லங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனம் திறைசேரிக்கு ரூ.100 மில்லியனை பங்கிலாபத்தை செலுத்தியுள்ளது. இது தொடர்பிலான சான்றிதழை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க மற்றும் பலர் கையளித்தனர். வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்

Read More

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களிடையே உளநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு

சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் பெரும்பாலும் தூக்கமின்மை, நீடித்த மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட உணர்ச்சிபூர்வ அதிர்ச்சியான மனநிலைக்கான அறிகுறிகளைக் காட்டுவதாக மனநல ஆலோசகர் வைத்தியர் விந்தியா விஜயபண்டார தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

Read More

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. பேரிடரின் விளைவாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் காணாமல்போனதாக அறிவித்தால், அத்தகைய காணாமல்போனவர்களின் இறப்புகளை அதிகாரபூர்வமாக பதிவுசெய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு திணைக்களத்தால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  திணைக்களத்தின் அறிவித்தலின்படி, தேசிய பேரிடர் பகுதிகள் மற்றும் நிர்வாக மாவட்டங்களில் இறப்புகளைப் பதிவுசெய்வதற்கான தற்காலிக…

Read More

யாழ். பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேருக்கு நாளை (12) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  கனிஷ்ட மாணவர்களை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதற்காக குறித்த மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நேற்று (10) மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.  விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்களை நாளை (12) வரை விளக்கமறியலில்…

Read More

மூன்றாவது தடவையாக வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்க பெடரல் வங்கி

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.25%  ஆக குறைத்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் அபாயத்தை தவிர்க்கும் நடவடிக்கையில், இந்த முடிவை எடுத்துள்ள பெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது. இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இதன்மூலம், தனிநபர் கடன், கடன் அட்டைகளுக்கான கடன் மற்றும் கார் அடமானக் கடன்களுக்கான வட்டி குறையும்…

Read More

தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம – அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினை இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தொடர்புடைய தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கணக்காய்வு குழுவினரின் ஆய்வின்போது தேயிலை நிறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைகளில் இரண்டு…

Read More
rauff

பாதிக்கப்பட்டவர்களின் நீர், மின் கட்டணங்களை குறையுங்கள் – ஜனாதிபதிக்கு ஹக்கீம் கடிதம்

2025 நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக பல குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.  இதையடுத்து,அவற்றால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக 2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்….

Read More

GOOGLE MAP வீதி வரைபடம் புதுப்பிப்பு

வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து கூகுள் மெப்ஸ் (Google Maps) A மற்றும் B வீதி வரைபடத்தை புதுப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 12,000 கிலோமீற்றர் வரையிலான பிரதான வீதிகளில் நிகழ்நேர தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அமைச்சர் அவரின் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனை அறிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் பயணங்களை மிகவும் வினைத்திறனுடன் திட்டமிட உதவுவதற்காக வீதி மூடல் மற்றும் கட்டுமான அறிவித்தல்…

Read More
arrest

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பலர் கைது !

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (10) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 27,953 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சந்தேகத்தின் பேரில் 614 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம், கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 270 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 123 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய…

Read More