எத்திமலையில் கஞ்சா செடிகள்,துப்பாக்கியுடன் இருவர் கைது!

மொனராகலையில் எத்திமலை – கொட்டியாகல பகுதியில் கஞ்சா செடிகள் மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் எத்திமலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 31 கஞ்சா செடிகள் மற்றும் ஒரு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 %

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாகக் கடந்த டிசம்பரில் மாதத்துக்கு மாத விலைகளில் கணிசமானளவு அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்குப் பிரதானமாகத் துணையளித்திருந்தது. உணவுப்பணவீக்கம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 3 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்ட அதேவேளை, உணவல்லாப்பணவீக்கம் நவம்பரில் பதிவான 1.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது….

Read More

பொதுப்படுகடன் திணைக்களம் மூடப்பட்டது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்குவரும் வகையில் பொதுப்படுகடன் திணைக்களத்தை மூடி, அத்திணைக்களத்தின் ‘Lanka Secure ‘ பிரிவினை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்துக்கு இடமாற்றுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுள் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. பொதுப்படுகடன் முகாமைத்துவ அலுவலகம் கடந்த ஆண்டு…

Read More

தையிட்டி விகாராதிபதி பதவி உயர்வுக்கு எதிராக போராட்டம்: 11 உறுப்பினர்களுக்கு அழைப்பு கட்டளை

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 21ம் திகதி தையிட்டி விகாரையின்…

Read More

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; தீவிரமாக விசாரணை

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து தொடர்பாகக் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  அனுமதி விதிகள், தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் அவசரகால வெளியேறும் வழிகள் முறையாக இருந்தனவா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் கிறிஸ்டியன் லென்ஸ் கூறுகையில், “பாதுகாப்பு கடமைகளைத் தவறியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். பாரின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவும்,…

Read More

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி நீதியமைச்சரிடம் அதிருப்தி

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிருப்தி வெளியிட்டிருக்கும் மக்கள் போராட்ட முன்னணியினர், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் அதனைப் பதிலீடு செய்வதற்காகப் புதிய சட்டம் கொண்டுவரப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய…

Read More

பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை

றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. றமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களால் விசேட உணவாக உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழத்தை அவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வருடாந்தம் இராஜதந்திர ரீதியாகவும், அமைப்புக்கள் மட்டத்திலும் மற்றும் தனிநபராகவும் நன்கொடையாக அல்லது அன்பளிப்பாக வழங்கப்படும். அவற்றை வெளிநாட்டு செலாவணி செலவாகாத வகையில் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படல் வேண்டும். அடுத்துவரும் றமழான் நோன்புக் காலம் 2026.02.19 அன்று ஆரம்பித்து 2026.03.21 ஆம் திகதி முடிவடையவுள்ளது….

Read More

குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன்  குரங்கு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு குரங்கு கடிக்கு உள்ளான  12 வயதுடைய சிறுவனே தக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.  குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த சிறுவன் மாலை நேரத்தில் பள்ளிவாயலுக்கு மதக் கடமையை நிறைவேற்ற தொழுகைக்காக சென்ற வேலையில் குரங்கு தாக்கியுள்ளது. 

Read More
DEATH

இரத்தினபுரி – திருவனகெட்டிய பகுதியில் கோர விபத்து : ஒருவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி – திருவனகெட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை வேளையில் இடம்பெற்ற பாரிய விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேனும்  ஓடுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வேனைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த லொறியுடன் மோதியுள்ளது. விபத்தின் தாக்கத்தினால் ஓடுகளை ஏற்றி வந்த…

Read More

காலி மாநகர சபையில் குழப்பநிலையை ஏற்படுத்திய மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் கைது!

காலி மாநகர சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறப்படும் காலி மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  காலி மாநகர சபையின் மேயர் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டத்தில் காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மேயர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி அவர் மீது தண்ணீரை தெளித்து “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர். …

Read More