தந்தை மகன் இணைந்தே அவுஸ்ரேலியாவில் துப்பாக்கிச்சுடு

அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலின் போது, ​​ தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரான நவீத் அக்ரம் (24) குறித்த புகைப்படம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த நபர் தனது 50 வயதான தந்தையுடன்(சஜித் அக்ரம்) இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் பொலிஸாரால் தந்தை கொல்லப்பட்ட நிலையில் மகனான நவீத் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதேநேரம் தந்தை துப்பாக்கிக்கான அனுமதியை ஏற்கனவே பெற்றிருந்தார் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் மும்முரமாக இடம்பெற்று…

Read More

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

அமெரிக்காவில் பிரவுன் பல்கலைகழகத்தில் இனந்தெரியாத நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். பிரவுன் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில், சனிக்கிழமை (13) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கறுப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிதாரியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கட்டிடத்தில் யார் இருந்தார்கள் என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்கள் பணியாற்றி வருவதாக பிராவிடன்ஸ் பொலிஸ் பிரதி தலைவர்…

Read More

மெஸ்ஸியின் 70 அடி சிலை திறப்பு – நீண்டநேரம் காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயோனல் மெஸ்ஸி 14 வருடங்களின் பின் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்துள்ளார். அதில் முதல்நாள் செயற்பாடுகளாக கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டுக் கழகம் சார்பில் உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு மெஸ்ஸியின் 70 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொளி மூலம் திறந்துவைத்த மெஸ்ஸி, அங்கிருந்து சோல்ட் லேக் விளையாட்டரங்கிற்கு சென்றார். அங்கு மெஸ்ஸிக்கு 78,000 ரசிகர்கள் ஆரவாரமாக கரகோஷம் எழுப்பி வரவேற்பளித்தனர்….

Read More

மூன்றாவது தடவையாக வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்க பெடரல் வங்கி

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.25%  ஆக குறைத்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் அபாயத்தை தவிர்க்கும் நடவடிக்கையில், இந்த முடிவை எடுத்துள்ள பெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது. இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இதன்மூலம், தனிநபர் கடன், கடன் அட்டைகளுக்கான கடன் மற்றும் கார் அடமானக் கடன்களுக்கான வட்டி குறையும்…

Read More

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம்

கனடாவை சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற நிறுவனம் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம் பிடித்துள்ளது. UAE பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் பறக்கலாம். சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை 2வது இடத்தில் உள்ளது. விசா நெறிமுறைகளை கட்டுப்படுத்தியதால் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் சரிவை சந்தித்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் முதல் 20 இடங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம்…

Read More

வெனிசுலா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது

அமெரிக்கா, வெனிசுலா கடற்கரைக்கு அப்பால் உள்ள அதன் தடைகளுக்கு உட்பட்ட ஒரு எண்ணெய் கப்பலை (Oil Tanker) பறிமுதல் செய்துள்ளது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா அரசாங்கம் இதனை “சர்வதேச கடற்கொள்ளை செயல்” எனக் கண்டித்ததுடன், இது “வெளிப்படையான திருட்டு” என்றும், இதை சர்வதேச அமைப்புகளிடம் முறையிடுவோம் என்றும் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தது

Read More

மொரோக்கோ – ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து 22 பேர் உயிரிழப்பு

மொரோக்கோ நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான ஃபெஸில் புதன்கிழமை (11) இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.  இரண்டு கட்டிடங்களில் ஒரு கட்டிடம் வெறுமையாக இருந்ததாகவும், மற்றொரு கட்டிடத்தில் இஸ்லாமிய மரபில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் அகீகா (Aqiqah) சடங்கு நடத்தப் பெற்றதாக ஃபெஸ் நகரை சேர்ந்த சட்டதரணி தெரிவித்துள்ளார். கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் எட்டு குடும்பங்கள் வசித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டதரணி மேலும்…

Read More

இலங்கையின் பேரிடருக்கு உதவியளித்த பங்களாதேஷ்

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பங்களாதேஷ் தனது விமானப்படை மூலம் C-130J விமானத்தில் பெருந்தொகையான நிவாரண பொருட்களையும் , மீட்ப்புப்பணிக்கு தேவையான சில பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது. இந்தவிமானமானது நேற்று (03) இலங்கைக்கு வந்தடைந்தது.

Read More

இலங்கைக்கு நிவாரண பொருட்களை கையளித்த பாக்கிஸ்தான்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் காலத்தில் மீட்ப்புப்பணிகளை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது. இலங்கை மக்களுக்கு தேவையான ஒரு தொகை அத்தியாவசிய மற்றும் நிவாரண பொருட்களோடு பாக்கிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் இலங்கையை நேற்று (3) வந்தடைந்தது.

Read More

பாகிஸ்தான் விமானம் இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதி..

இலங்கைக்கு மனிதாபிமான உதவியை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு இந்திய வான்வெளியில் பறப்பதற்கான அனுமதியை புதுடெல்லி தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை இந்தியா செவ்வாய்க்கிழமை (2) “அபத்தமானது” மற்றும் “தவறான தகவல்” எனக் கூறி நிராகரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், விமான அனுமதி கோரிக்கை டிசம்பர் 1 ஆம் திகதி பிற்பகல் 1:00 மணியளவில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு கிடைத்ததாகக் கூறினார். இந்திய…

Read More