Seylan Bank Continues to Build Literacy and Equalise Learning for Young Minds with the 280th ‘Seylan Pahasara’ Library

Seylan Bank continues to empower young minds by building a solid bedrock of literacy and learning with the opening of their most recent Pahasara library on the 09th of April 2025. The Presbyterian Girls’ School Colombo’s new library represents the 280th chapter to open to date. Representing the most recent expansion of the Bank’s goal…

Read More

இலங்கையின் சுகாதார பயணத்தில் துணிச்சலான புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் புதிய வர்த்தக இலச்சினையை வெளியிட்ட Lina Manufacturing

Sunshine Holdings PLCஇன் மருந்து உற்பத்தி பிரிவான Lina Manufacturing Limited, தனது புதிய வர்த்தக இலச்சினையை வெளியிட்டுள்ளது – ஒரு சிறந்த வர்த்தக இலச்சினையானது, நிறுவனத்தின் வளர்ச்சி, தூரநோக்குப் பார்வை மற்றும் மதிப்பிடத்தக்க, தரமான சுகாதார தீர்வுகளை வழங்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. Linaவின் வர்த்தக இலச்சினைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் இந்த புதிய இலச்சினை, நிறுவனத்தின் பிரதான நோக்கத்துடன் இணைந்த ஒரு நவீன அடையாளத்தைக் கொண்டு ஒரு புதிய ஆரம்பத்தை சின்னமாகக் கொண்டுள்ளது….

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் 06 வருடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. தெமட்டகொடை மற்றும்…

Read More

இலங்கைக்கே உரித்தான புதிய வகை நுளம்பு

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நுளம்பு இனமானது, கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ் என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் ஒரு முக்கிய வைரஸ் கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

மன்னாரில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது, பொலிஸார் துப்பாக்கிச்சூடு

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த டிப்பரை கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார் இடைமறித்தபோது, சமிக்ஞை கட்டமைப்பை மீறி பொலிசார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது. இதன்போது டிப்பர்…

Read More

ஈஸ்டர் தாக்குதலை அரசியலாக்கும் அரசாங்கம் : நாமல் எம்.பி சீற்றம்

ஈஸ்ரர் தின தாக்குதலை வைத்து அரசு அரசியல் செய்வதாக நாமல் ராஜபக்ச எம்.பி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை, அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவுகளின்படி, பெப்ரவரி 23, 2021 அன்று முறையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெப்ரவரி 25, 2021 அன்று அல்லது அதற்குள், நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக பொதுமக்கள் இன்னும்…

Read More

மனிதர்கள் பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது….

Read More

நுவரெலியா மலர் கண்காட்சி இன்றும், நாளையும்

நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த கால கொண்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இன்று (18) விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த மலர் கண்காட்சி இன்றும் (18) நாளையும் (19) ஆகிய இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளையும், பார்வையளர்களை மிகுதியாய்…

Read More