ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்விற்கான போலி அழைப்பிதழ் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை

கண்டியில் நடைபெறும் ‘ஸ்ரீ தலதா வழிபாடு’ நிகழ்விற்கான போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள திணைக்களம், அரசாங்கம் அத்தகையை எந்த அழைப்பையும் வெளியிடவில்லை என்றும் சுட்டிக்காட்டியது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் அழைப்பிதழ், இன்று கண்டியில் நடைபெறும் ஸ்ரீ தலதா வழிபாடுவில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது. கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த…

Read More

இன்று புனித வெள்ளி

இன்று புனித வெள்ளி நாளாகும், உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் நாள் இன்றாகும். கிறிஸ்துவின் துன்பத்தை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன்கிழமை தொடங்கி 40 நாட்கள் உண்ணாவிரதம், தானம் மற்றும் கிறிஸ்தவ புனிதர்களின் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் பாத வழிபாடு ஆகியவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். இவை பொதுவான மத நடைமுறைகள் ஆகும். இந்நிலையில், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் நாள் அல்லது ஈஸ்டர் ஞாயிறு, அடுத்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது….

Read More

காதலனின் மரண செய்தி கேட்ட காதலி தற்கொலை

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More

ஸ்ரீ தலதா வழிபாடுகளுக்காக இராஜதந்திரிகள் ரயிலில் பயணம்

16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று  வெள்ளிக்கிழமை  (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும்  நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர். வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில்…

Read More

ரயிலில் மோதி காட்டு யானை பலி

கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் காட்டு யானையொன்று மோதி உயிரிழந்துள்ளது. சியம்பலங்காமுவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க யானை ரயிலில் மோதியதால் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யானையின் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்த நிலையில் மீகலேவா வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

காலியில் ஹோட்டலில் தாக்குதல் சம்பவம் – ஆறு பேர் மருத்துவமனையில்

காலியில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் நேற்று இரவு(16) ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த குழுவினர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு குறித்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், உணவகத்தைச் சேர்ந்த…

Read More

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் நடைபெறும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதன்படி, நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பு மத சேவைகள் நடைபெறும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது. எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார். இந்த காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்த்த…

Read More

கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கஞ்சிபாணி இம்ரான்

போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, வனத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர், சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகைன்’ போதைப்பொரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில்…

Read More

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டது

ஈரான் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஈரான் அணுகுண்டை உருவாக்கும் பணியைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார். ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால், அவர்கள் விரைவில் அதை சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஈரான் அணுகுண்டை உருவாக்க தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டது. மேலும், உலக சமூகம் அவர்களின் யுரேனிய செறிவூட்டலை அமைதியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்…

Read More

பாம்பை விட்டு கணவரை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி

குடும்ப உறவுகளில் பரவி வரும் இருண்ட அடித்தளங்களை நினைவூட்டும் விதமாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தில் மற்றொரு கொடூரமான வாழ்க்கைத் துணை கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. அண்மையில் தனது கணவனை, மனைவி அவரின் சட்டத்திற்கு புறம்பான உறவில் இருந்த காதலனின் உதவியுடன் கொலை செய்து சிமெந்து நிரப்பப்பட்ட கொள்கலனில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீரட்டின் பஹ்சுமா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவியால் மர்மமான…

Read More