4.7 கோடி ஆண்டுகள் பழமையான பாம்பு கண்டுபிடிப்பு

குஜராத்தில் சமீபத்தில் நடந்த ஒரு ஆராய்ச்சியின் போது விஞ்ஞானிகளால் ஒரு பழங்கால ராஜ நாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் உலகின் மிகப்பெரிய பாம்பின் கதையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. வாசுகி இண்டிகஸ் என்று பெயரிடப்பட்ட இந்த வரலாற்றுக்கு முந்தைய பாம்பு 49 அடி நீளமும் 1,000 கிலோகிராம் எடையும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இதுவரை இருந்த மிகப்பெரிய பாம்பான டைட்டனோபோவாவை கூட மிஞ்சும். ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி)…

Read More

யாழ் பொலிஸாரின் மோசமான செயல் …துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி ஒரு இளைஞனை கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அவரை அழைத்துச் சென்றதாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான ஒரு சந்திப்பை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தச் சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை. அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிகளுடன் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார், சந்திப்புக்கு அழைப்பு…

Read More

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 5 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை

யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை (22) உயிரிழந்துள்ளது. உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு திங்கட்கிழமை (21) காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைக்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தைக்கு காய்ச்சல் குணமாகாத நிலையில் செவ்வாய்க்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை…

Read More

நாட்டின் இன்றைய காலநிலை

இன்று (23) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கன மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்….

Read More

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் -28 பேர் பலி

காஷ்மீர் – பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  முக்கிய சுற்றுலாத் தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த தாக்குதலைப் பொறுப்பேற்றுள்ளது.

Read More

மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை

மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அமைதியின்மை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது. ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த கைதிகள் குழு ஒன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதற்றமாக நடந்து கொண்டதாகவும்,…

Read More

மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்க NPP தயாரில்லை : திகா எம்.பி

மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் 10 பேர்ச் காணியை உடன் வழங்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எதிரணியில் இருந்தபோது தாம் செய்வதாகக்…

Read More

டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்தார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு…

Read More

காலமானார் போப் பிரான்சிஸ்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், இன்று காலமானார். 88 வயதான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக, கடந்த பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று மார்ச் இறுதியில் வாடிகனுக்குத் திரும்பினார். ஈஸ்டர் தினமான நேற்று வாடிகனில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, “காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு போப் பிரான்சிஸ் இறந்துவிட்டதாக வாடிகன் அறிக்கை…

Read More