சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்று

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும். (27)  அதன்படி, இன்று காலை 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாத்ரீகர்கள் புனித தந்த தாதுவை வழிபடும் வாய்ப்பு கிடைக்கும்.  உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் போற்றப்படும் மற்றும் செங்கடகல இராச்சியத்தில் உள்ள வரலாற்று…

Read More

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களுக்குரிய அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தமது அடையாளத்தைச் சரி செய்து, பின்னர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள…

Read More

நம் நாட்டின் பிரபல பாடகர் உயிரிழந்தார்

பிரபல சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார். பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ள அவர், 1975 ஆம் ஆண்டளவில் முழுநேர இசை வாழ்க்கையில் நுழைந்து 4 தசாப்தங்களுக்கும் மேல் இசை துறையில் பணியாற்றியிருந்தார்.

Read More

நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பல தடவைகள் மழை…

Read More

வவுனியாவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

உயர் தர பரீட்சையில் கணிதப் பிரிவில் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் குகதாசன் தனோஜன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியாகின. அதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற குகதாசன் தனோஜன் என்ற மாணவன் மூன்று பாடங்களில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 144 ஆவது இடத்தையும்…

Read More

ஈரான் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 400 பேர் காயம்

தெற்கு ஈரானின், பந்தர் அப்பாஸ் பகுதியிலுள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் இன்று (26) பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  குறித்த சம்பவத்தில் 400ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஓமானில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.  அத்துடன் வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

Read More

2024 இல் உயர்தர பரீட்சை எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.  2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.  அனர்த்த நிலைமையின் காரணமாக அதன் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.  2024 ஆம் ஆண்டில் 333,185 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்ததுடன், அவர்களில்…

Read More

உள்ளூராட்சி தேர்தலுக்கு வழங்கவேண்டிய விடுமுறை விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அத்துடன் தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை…

Read More

“CSK vs SRH” போட்டியை காண வந்த AK மற்றும் SK

நேற்று (ஏப்ரல் 25) சென்னையில் நடந்த IPL 18வது சீஸனின் 43வது CSK vs SRH போட்டியை காண நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர். அஜித், ஷாலினி ஆகியோர் உடன் எடுத்த போட்டோக்களை சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அவை தற்பொழுது வைரலாகி வருகின்றன. நேற்றய போட்டியில் தோனியையும், அஜித்குமாரையும் கேமராமேன் மாரி மாரி காட்ட அரங்கமே அதிர்ந்தது.

Read More

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு – வௌியான தகவல்கள்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்…

Read More