கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
2,000க்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாதிப்பு!
மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களில் இணைக்கப்படாத இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்கள் குழு ஒன்று, அவர்களின் ஓய்வூதிய நிலை குறித்து எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆகஸ்ட் 26 திகதியிட்ட அசாதாரண வர்த்தமானி எண். 2451/11 இன் படி CEB மறுசீரமைப்பைத் தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் உள்வாங்கப்படாத ஊழியர்களாக தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததாக அந்தக் கடிதத்தில் ஊழியர்கள் கூறுகின்றனர். எனினும், தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்த கிட்டத்தட்ட…

