இலங்கையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் தங்க விலை!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு…

Read More

ராஜஸ்தானில் 9 பேருக்கு கொரனோ பாதிப்பு

தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை உட்பட 9 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்….

Read More

விளம்பரங்களால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

சமூக ஊடக விளம்பரம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்கும் விளம்பரங்களால் பல சிறுவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இசபெல் ஹேன்சன் நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், 13-17 வயதுடையவர்கள் சமூக ஊடகங்களில் ஒரு மணி நேரத்திற்கு 17 விளம்பரங்களைப்…

Read More

சீனாவில் மணப்பெண் தட்டுப்பாடு – ஏக்கத்தில் 30 இலட்சம் இளைஞர்கள்

சீனாவில் சுமார் 30 இலட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு என்ற சூழல் நிலவி வரும் நிலையில்,பங்களாதேஷில் இருந்து மணப்பெண்களைக் கடத்தி சட்டவிரோதமாக திருமணம் செய்ய சீன மணமகன்கள் முன்வருகின்றனர். தரகர்கள், ஒன்லைன் விளம்பரங்கள் மூலம் இதுபோன்ற திருமணங்கள் நடக்கின்றன. இதனால் பங்களாதேஷில் உள்ள சீன இளைஞர்கள் யாரும் வெளிநாட்டு பெண்களை மணக்க வேண்டாம் என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More

வெற்றிகரமாக நடந்து முடிந்த மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது. China Media Group (CMG) குழுமம் ஏற்பாடு செய்த குறித்த போட்டியில் பல சுற்றுகள் நடைபெற்றன. அதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மனித இயந்திரங்கள் பார்ப்போரை வியக்கச் செய்யும் அளவுக்குகுத்துச் சண்டையில் ஈடுபட்டன. இறுதியில் “AI Strategist” என்கிற இயந்திரமே வெற்றிபெற்றது. CMG உலக இயந்திரப் போட்டியின் ஓர் அங்கமாக அந்தக் குத்துச் சண்டை போட்டி நடந்ததாக CGTN தெரிவித்தது….

Read More

உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக குறித்த பாடசாலையின் ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.  இருப்பினும் ஏனைய வகுப்பு சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள்

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவார்கள் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று இலங்கையில் காணப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை அறிவித்துள்ளது.

Read More

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட 2 நபர்களையும் கைது செய்துள்ளனர்.  இந்நிலையில் அந்த துப்பாக்கிக்கு…

Read More

சொக்லட்களில் நச்சுப் பொருள் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

சில வகையான சொக்லட்களில் cadmium எனப்படும் நச்சுப் பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். cadmium மிகவும் ஆபத்தான பண்புகளில் ஒன்றாகும். அது உடலை விட்டு வெளியேற 10-30 ஆண்டுகள் ஆகும். இதனால் இரண்டு தலைமுறைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், cadmium சொக்லட்டில் மட்டுமல்ல, tortilla மற்றும் உண்ணப்படும் சில மட்டி மீன்களிலும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மியாமி பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் டெலியா ஷெல்டன், இந்தப் பொருளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது இதய…

Read More

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Read More