ராமேஸ்வரம் தலைமன்னார் இடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து

தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு, தனுஷ்கோடியிலிருந்து 1914-ஆம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டு டிசம்பரில் தனுஷ்கோடியை புயல் தாக்கிய பிறகு, 1965-ஆம் ஆண்டிலிருந்து ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இந்த கப்பல் சேவை 1981-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தியா – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து…

Read More

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்க்கு வந்த 14 பேர் கைது!

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டி, நோர்ட்டன்பிரிஜ், கினிகத்ஹேன மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மற்றும் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மன்னார் பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதுடன், அந்த வாகனத்தில் 4 பேர் பயணித்துள்ளனர். இதன் போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட…

Read More

300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை யாழில் பறிமுதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எந்த நபர்களும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை…

Read More

கோலாகலமாக ஆரம்பமாகும் IPL திருவிழா

உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இன்று (22) தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் முந்தைய சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7.30 க்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணிக்கு அஜிங்க்யா ரஹானே தலைமை தாங்குவார் என்றும், பெங்களூரு அணிக்கு ரஜத் படிதார் தலைமை தாங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read More

வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடுமையான சட்டம்

வரி ஏய்ப்பு மற்றும் வரியை ஏமாற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார் மேலும் லஞ்சத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்கப்படும் என்றார். ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் மேலதிகக் கட்டணங்கள் இன்றி ஒதுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Read More

2025 வரவு செலவு திட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றிதழை பதிவு செய்துள்ளார். இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வேலை நிறுத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (21) நடைபெற்றது. ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114…

Read More

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் பிரவேசித்த தரப்பினர் இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதுடன் அவர்கள் தப்பிச் சென்று சிறிது தூரத்துக்குப் பின்னர் குறித்த வேனை தீ மூட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்துக்கு…

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இந்த சந்தேக நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை காட்டி, மனித படுகொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர் கைது…

Read More

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம்

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும்…

Read More